Skip to main content

தீபாவளி ---

அழகியசிங்கர் 



அந்த வருடம்

தீபாவளி போது ஒரே மழை
வெள்ளம். தண்ணீர் வீட்டிற்குள்
நுழைந்து எல்லாவற்றையும் 
எடுத்துக்கொண்டு போயிற்று 
பாத்திரங்கள் தெருவில்
மிதக்கத் தொடங்கின
ஓடிப்போய் எடுத்தோம்.

செத்துப்போன அம்மாவின் ஞாபகமாய்
த்வசம்.  தீபாவளிக்கு அடுத்தநாள்.
வாத்தியார்கள் நனைந்தபடி வந்து சேர்ந்தார்கள்
நாங்கள்
ஈரமான வேஷ்டிகளைக் கட்டிக்கொண்டு
த்வசம் செய்தோம்.

அம்மா புகைப்படத்தைப் 
பார்த்தேன். புன்னகைத்தபடி இருந்தாள்
என்றுமில்லாத அன்று அலாதியாய் தெரிந்தாள்
மாடியில் பிண்டத்தை எடுத்துக்கொண்டு
காக்கையைக் கூப்பிட்டோம்..

காக்காய் வரவில்லை
ஆனால் மழை ரூபமாய் அம்மா வந்தாள்

மறக்க முடியாத தீபாவளி

13.11.2020  (வெள்ளி)

Comments

Popular posts from this blog