Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 92




அழகியசிங்கர்





அசடு என்ற நாவல் மூலம் புகழ் பெற்றவர் காசியபன்.  கேரளா பல்கலைக் கழகத்தில் எம் ஏ தத்துவத்தில் கோல்ட் மெடல் வாங்கி உள்ளார்.  'முடியாத யாத்திரை'  வரும்போது அவர் உயிரோடு இல்லை.  ஒரு நீண்ட கவிதையுடன் சேர்த்து 25 கவிதைகள் உள்ளன. இத் தொகுப்பை 300 பிரதிகள் அச்சடித்திருந்தேன்.  ஆனால் பாதிக்குமேல் என்னிடம் உள்ளன.  இத் தொகுப்பு விலை ரூ.60.  பாதி விலைக்கு அதாவது ரூ.30க்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.   வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும்.



மின்கம்பி மேலே 

காசியபன்


மின்கம்பி மேலே 
அந்த குருவிகள் இரண்டும்
எத்தை நோக்கி 
தியானம் புரிகின்றன? 
கிழக்கே 
நாளை பிறப்பிக்கும் 
செக்கச் செவந்த
சூரியனையா? 
 இல்லை , 
மேற்கே 
இரவெலாம் பிரகாசித்து 
களைத்து அணையமுயலும் 
ஒளியற்ற சந்திரனையா? 
எத்தை நோக்கி 
தியானம் செய்கின்றன? 
தெற்கே
ஓங்கி உயர்ந்து நிற்கும் 
பாறை குன்றையும் 
அதன் உச்சியில் நிற்கும் 
மொட்டை மரத்தையுமா? 
இல்லை, இல்லை 
தலைகளைக் குனிந்து 
தங்களை நோக்கி 

இது முன்னமே எனக்கு 
தெரியாமல் போனதேன்? 
பரவாயில்லை . 
இப்போது அவைகள் 
எங்கோ பறந்து 
மறைந்துவிட்டன. 
மின்கம்பியும் நானும் 
வெறிச்சென்றிருக்க.

நன்றி :  முடியாத யாத்திரை  - கவிதைகள் - பக்கங்கள் : 62 - விலை : ரூ.60 - விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 - தொடர்புக்கு : 9444113205

Comments