Skip to main content

துளி :5 - இன்று காந்தி பிறந்த தினம்


துளி :5 - இன்று காந்தி பிறந்த தினம்

அழகியசிங்கர்




காந்திய அறிஞர் என்று பரவலாக அறியப்படும் லா சு ரங்கராஜனை ஒரு முறை பெ சு மணி அவர்கள் மூலம் சந்திக்கும்படியான வாய்ப்பு கிடைத்தது.  அப்போது அவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்தார். அவர் காந்தியைப் பற்றி எழுதிய இரண்டு புத்தகங்களை அளித்தார்.  ஒரு புத்தகம்பெயர் 21 ஆம் நூற்றாண்டில் மகாத்மா காந்தி.  இன்னொரு புத்தகம். பிரார்த்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி. நான் அதிகமாக சேகரித்து வைத்திருப்பது காந்தியைப் பற்றிய புத்தகங்களும் பாரதியார் பற்றிய புத்தகங்களும்தான். 
ஆங்கிலத்தில் தன்னைப் பற்றி எழுதிய ஒரு சிறிய புத்தகமும் வைத்திருக்கிறேன்.  அந்தப் புத்தகத்தில் காந்தி தன்னை மகாத்மா என்று சொல்லிக்கொள்வதில் விருப்பம் இல்லாதவராக இருக்கிறார். தன்னை யாரும் மகாத்மா என்று கூப்பிடுவதை அவர் விரும்பவில்லை. தனக்கு சிலை வைப்பதை காந்தி  ஒரு போதும் விரும்பியதில்லை.  அதேபோல் தன்னை புகைப்படம் எடுப்பதையும் அவர் விரும்பவில்லை.  ஒருமுறை அவருடைய சிலை ஒன்றை பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து மும்பையில் பொது இடத்தில் வைப்பதாக இருந்தது. அந்தத் தொகையை சிலை வைப்பதற்குப் பதிலாக பொதுமக்களுக்கு செலவு செய்யலாமென்று கூறியவர் காந்தி. 
காந்தியின் நினைவோடு இதை முடிக்கிறேன். 

Comments