Skip to main content

துளி : 3 - செல் போனை கொள்ளை அடித்துக்கொண்டு போனால் என்ன செய்வது?


அழகியசிங்கர்




இன்று மாலை நானும் என் மனைவியும் சில கோவில்களுக்குச் சென்றோம்.  இறுதியாக நாங்கள் சென்று வந்த கோயில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில்.  கொஞ்சங்கூட கவனம் இல்ûலாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தேன்.  அடையார் கேட் ஓட்டலைத் தாண்டி வந்துகொண்டிருந்தேன்.  பின்னால் மனைவி கையில் பேக்கை வைத்துக்கொண்டு இருந்தார்.  அதை ஒரு பையில் போட்டு டூ வீலர் பாக்ஸில் வைத்திருக்கலாம்.  ஒன்றும் தோன்றவில்லை. எனக்கும்.  யாரோ இரண்டு இளைஞர்கள் டூ வீலரில் வேகமாக வந்து என் மனைவி கையிலிருந்து பேக்கைப் பிடுங்கிக்கொண்டு வேகமாக ஓடி விட்டார்கள்.  நான் கத்திக்கொண்டு அவரைகளைத் துரத்திக்கொண்டு போனேன்.  என்னால் முடியவல்லை. மேலும் என் மனைவி பின்னால் இருந்ததால் பேலன்ஸ் தவறி விடுமோ என்று தோன்றியது.  ஒரு செல்போன், ஒரு சாவி, ரூ.2000 பணம போய்விட்டது.  என் பர்ஸ்ûஸ யாராவது கொள்ளை அடித்தால் ஏடிஎம் கார்டு ரூ.500க்குள்ளே பணம்தான் போயிருக்கும்.  பின் சில விஸிட்டிங் கார்டு போயிருக்கும்.  இப்போது என்ன செய்வது என்று இதுமாதிரி செல் போனை தொலைத்தவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  புத்தகக் கண்காட்சியின் போது ஏகப்பட்ட செல் போன்கள் இப்படித்தான் போகும்.  செல் போன் கொள்ளையர்களே நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள். என்று சொல்வதைத் தவிர வேற வழி இல்லை. 

Comments