Skip to main content

மறந்து போன பக்கங்கள்....


அழகியசிங்கர்



தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள நான்காவது கவிதை சிறை.  சில கவிதைகள் வாசித்தால் எளிதாக நம்மை நோக்கி வரும். மிகக் குறைவான வரிகள் கொண்ட இக் கவிதை எதை நோக்கி எழுதப் பட்டிருக்கிறது. கனிக்குள்ளே இருந்து பிரிந்த தரு.  திரும்பவும் கருவாய் உருவாகிறது.  அதேபோல் நமது சிந்தை, சொற்கள், செயல் வாழ்க்கை மூலம் நம் வாழ்க்கையின் தத்துவத்தை நாம் சிலசமயம் தாண்டி வந்து விடுகிறோம். சிலசமயம் தத்தவத்துள் அடங்கி விடுகிறோம்.  ஏதோவிதத்தில் நாம் சிறையில் இருக்கிறோம்.  விரும்பினால் சிறையிலிருந்து விடுபடலாம். 

சிறை

தருவின் பிரிந்த கனிக்குள்ளே
தருவே கருவாய் உருவாச்சு.
தத்துவத்தைத் தாண்டிவந்தோம்;
தத்துவத்துள் தடைப்பட்டோம்
ஆம், நமது சிந்தை,
சொற்கள், செயல், வாழ்க்கை
எல்லாம் தான்!



Comments

Popular posts from this blog