Skip to main content

மழைக்காலம்.


ரவிஉதயன்



தவறி விடுமென்று நம்பிக்கையில்
பயமின்றி
நடுங்கும் கைகளோடு
குறி பார்க்கும் கண்களின்
துப்பாக்கி முனையில் நிற்கிறேன்.
ஊசி மழைத் துளிகள் போல
என்னுள் நுழைகின்றன ரவைகள்.
விரிபடாத குடையை
விரிக்க முயலுகிறவனைப் போல
விலுக்கென்று அப்படியே
நிற்கிறேன்.
காதலாகி கசிகிறது
மழைத்துளிகளின்  ரத்தம்.



Comments