Skip to main content

பகவான் மீது தேள்கள்

21.12.2014 - ஞாயிறு எழுதியது.


அழகியசிங்கர்



கந்தாச்ரமத்தில் இருக்கும்போது ஒரு நாள், ரமண மகரிஷி மீது முன்பக்கம் ஒரு தேள் மேலே ஏறிக்கொண்டிருந்தது. அவருடைய பின்பக்கம் இன்னொரு தேள் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த வாசதேவ சாஸ்திரி என்ற அன்பர் பயந்துபோய் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் பகவான் ஒன்றுமே நடவாததுபோல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அந்த இரண்டு தேள்களும் சுவற்றில் ஏறுவதுபோல் ஊர்ந்து சென்று அவரை விட்டு கீழே இறங்கிவிட்டது. அவைகள் சென்ற பிறகு பகவான் அவர்களிடம், üüதரையிலோ சுவற்றிலோ மரத்திலோ ஊர்ந்து போவதுபோல் அவை நம்மீதும் ஊர்ந்து செல்கின்றன. சுவற்றின் மீது, தரையின் மீது போகும்போது அவை கொட்டிக்கொண்டோ போகின்றது. நீங்கள் அதைக் கண்டு பயந்து ஏதாவது செய்வதினால்தான் பதிலுக்கு அவைகளும் பயந்து போய் ஏதாவது செய்கின்றன,ýý என்று விளக்கினார்.


இந்த விபரம் ரமணரின் சரிதமும் உபதேசமும் பாகம் 1ல் இருந்து கிடைத்தது. பொதுவாக தேள் கொட்டி விட்டது என்றுதான் பிறர் சொல்லி நாம் அறிவோம். ஒரு தேளை நாம் பார்த்தால் அதன் பக்கத்தில் நெருங்க மாட்டோம். அதைக் கவனியாமல் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் தேள்களும் நம்மைக் கொட்டாமல இருப்பதில்லை.


மகான் விஷயத்தில் இது வேறு மாதிரியாக இருக்கிறது. ஜே கிருஷ்ணமூர்த்தி விஷயத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் விவரிக்கப் படுகிறது. புலி, சிங்கம் மாதிரி ஒரு கொடிய விலங்கு வெறுமனே பார்த்துவிட்டுப் போய்விடுகிறது. 


கிருஷ்ணமூர்த்தி அதுமாதிரியான கொடிய விலங்கை வெறுமனே உற்றுப் பார்க்கிறார். அது ஒன்றும் செய்யாமல் போய்விடுகிறது. அதற்குக் காரணம் சிருஷ்ணமூர்த்தியிடம் பயம் இல்லை. பயத்தை வெளிப்படுத்தினால் அது நம்மை தாக்க வரும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி

Comments