Skip to main content

லாவண்யா

மனச்சிறை

பெய்த மழையில்
வனம் கடலானது
வீசிய புயலில்
மரங்கள் விழுந்தன
மரம் விழுந்த்தில்
என் கூடு  தொலைந்த்து
நீரும் தீயும்
என் கூடழிப்பது
என் பிறவியின் சாபம்
முதல் குருவி துவங்கி
என்வரை
சலியாமல் கட்டுகிறோம்
மீண்டும் மீண்டும்
கூடிழக்கும் துயரும்
கூடுகட்டும் சிரம்மும்
அனுபவித்தால்மட்டுமே புரியும்
உலர்ந்த புற்களை
மெலிந்த சுள்ளிகளை
சேகரிக்கும்போது
கூடு ஒரு மனச்சிறையென்று
ஒரு குரல்
தலைக்குள் கேட்டது.

நிறுத்திவிட்டேன்.

 

அற்ப சந்தோஷம்

குயில் கூவக்கேட்டு
கனவு காணலானேன்
குளிர் காற்று வீசவே
மனங்குளிரலானேன்
மின்னல் மின்னக்கண்டு
பெரிதும் மகிழ்ந்து போனேன்
கருமுகிற்கூட்டம் வரவே
களிப்படையலானேன்
அற்ப சந்தோஷத்தில்
ஏமாந்து போனேன்.

 

Comments

இரண்டும் அருமை...!