Skip to main content

அழகியசிங்கர் கவிதைகள்








கவிதை ஒன்று


டேபிளின் மீதிருந்த
காப்பிக் கோப்பைகளை
அலட்சியமாக விட்டுவிட்டுப்
போய்விட்டீர்கள்....

யார் அதை எடுத்துத்
தூக்கி எறிவது....

உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
அது அப்படியே இருப்பது....

காப்பிக்கோப்பைகள்
தானாகவே போய்க்
குப்பைக் கூடையில் வீழாது..

மிச்சம் மீதியிருக்கும்
காப்பிக் கரைகளைப்
பார்க்க பார்க்க அருவெறுப்பாக இல்லையா..
யார்தான் அதைத் தூக்கி எரிவார்கள்..
                                                                      11.02.2013


கவிதை இரண்டு

வாழ்க்கை என்பது
என்னவென்று கேட்டேன்..

வாழ்க்கை என்பது
அப்படித்தான் என்றான் படுபாவி

                                                                     15.02.2013

Comments

1. நல்ல கேள்வி...?

2. ஹா...ஹா...

(காப்பிக் கறைகளைப்)

Popular posts from this blog