Skip to main content

ஊனப் பிள்ளையார்



அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி....
பட்டினியாய்... பரிதாபமாய்...
இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த  வயிறோடு
மோதக பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.  

Comments

இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த வயிறோடு
மோதக பாத்திரத்துடன்
பார்த்த நினைவு. /

அடடா! கடவுளுக்கு நேர்ந்தகதி!
Anonymous said…
நல்ல கவிதை... நல்ல சிந்தனை... சூர்யா.

Popular posts from this blog