Skip to main content

தசாவதாரம்



அலைகள் ஒன்றையொன்று
துரத்தி விளையாடுகிறது
குளத்தில் சலனம்
எறிந்த கல்
நீரில் அமிழும்
கோயில் நகரத்தில்
கடவுளுக்கு இடமில்லை
விபத்து நடந்த பகுதியில்
வாகனங்கள் விரையும்
வேகத்தைக் குறைக்காமல்
வாழ்க்கை ரகசியம்
ஜாதகக் கட்டத்தில்
தெரியுமென்றால்
ஜோதிடக்காரன்
அன்னாடங்காச்சியாக
இருப்பதேன்
ஈரம் இல்லாத
மனிதர்களால் தான்
உலகம் விளிம்பில்
நின்று கொண்டிருக்கிறது
ஆளுக்கேற்றபடி
வேஷம் போடத் தெரியாதவன்
தேசாந்திரியாகத்
திரிய வேண்டியது தான்.

Comments

Popular posts from this blog