Skip to main content

வீடு பேறு

நத்தை ஒன்றுபோகிறது

மெல்லுடலில்

பாரிய வீட்டை

சுமந்தபடி.

போகிறதா?

ஆம்.

உன்னை போல்

என்னை போல்

நம்மை போல்.அது

நகர்ந்து எஞ்சிய நீர்த்தடங்களில்

வீடு குறித்த

ரகசிய கேள்விகளின் ரசம்

மின்னிக்கொண்டு இருக்கிறது...

Comments

Popular posts from this blog