Skip to main content

புள்ளி என்ற கவிதைத் தொகுப்பு


இரவில் பேய்கள்


குருட்டுக் கண்களைத்

திறந்து பார்த்தால்

இருட்டு தான்

பிரகாசமாய்த் தெரிகிறது

செவிட்டுச் செவிகளைக்

கூராக்கி முயற்சித்தால்

நிசப்தம் தான்

கூச்சலாய்க் கேட்கிறது

நுகராத நாசியை

நுழைத்துப் பார்த்தால்

சாக்கடை மணம்

சுகந்தமாய் இருக்கிறது

உருமாறிப் போனவன்

உடல் மாறி

மனம் மாறின பின்

Comments