Skip to main content

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்....23


தாரா கணேசன்


அனாதை இல்லத்து

சயாமிப் பூனைக்குக் கண்கள் குருடு

அறை மூலை மென்னிருக்கையில்

தன் அரூபக்கனவின் மீசைகள் துடிக்க

கைகள் தந்து சந்தித்தது

அது என்னை முதன் முதலாய்

தூக்கியெடுத்து மீசையுரசிக் கொஞ்சித்

திரும்ப

பிரியத்தின் கண் இடுங்கச் சோம்பல்

முறித்தது

அங்குமிங்கும் அலைந்தன கண்ணாடி

விழிகள்

தேவதையின் இறக்கைகளுடன்

கனவின் அடுக்குகள் ஒளிர

மதில் மேல் சயனித்திருந்த அதன்

கூவலில் கலைந்தது உறக்கம்

மருண்ட பார்வையில் நானும் அதுவும்

மயங்கி நின்றவள்

துயருற்று நடுங்கும் மென்கரத்தால்

கண்கள் சுழற்றி அதற்குப்

பொருத்தினேன்

அந்தப் பூனை பறவையாகிப் பறந்தது

அன்றிலிருந்து இரவுகளில்

பூனைக்குரலில் பேசும் பறவையொன்று

பின் தொடர

விநோதங்கள் நிறைந்த பூனைகளின்

தீவில்

அலைகிறேன் கோமேதகக்

கண்களுடன்.

Comments

அருமையான கவிதை

சுழற்றி அடிக்கிறது