Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 145


அழகியசிங்கர்  



 முகமூடிகளின் உலகம்



அதங்கோடு அனிஷ்குமார்




தேவைகளுக்கேற்ப
தேவைப்படுகின்றன முகமூடிகள்

 பூகம்ப மனதின் அதிர்வுகள் அழித்து
புன்னகை பூக்க
கொலைவெறி புதைத்து
கொல்லென்று சிரிக்க

முகமூடிகளின் பொருட்டு
எல்லோரும் தொலைக்கிறார்கள்
முகங்களை

முகமூடிகளின் உலகத்தில்
முகங்கள் கழுவேற்றப்படுகையில்
உயிர்வலியெடுத்து
கதறுகின்றன
யதார்த்தத்தின் குழந்தைகள்

முடியாது இனி
முகமூடிகளற்று
முகம் காட்ட

எந்த முகமூடியணிந்தாலும்
எட்டிப் பார்க்கும்
என் முகத்தை
எப்படி மறைப்பது?



நன்றி : நிறங்களின் பேராசைக்காரர்கள் - அதங்கோடு அனிஷ்குமார் - மயூரா பதிப்பகம், 37 தொட்டராயன் கோயில் வீதி, கோயமுத்தூர் 641 009 - பக்: 64 - விலை : ரூ.30 - வெளியான ஆண்டு : 2008 - தொலைபேசி : 93607 89001

Comments