Skip to main content

விருட்சமும் கூட்டமும்




அழகியசிங்கர்



போன மாதம் மறுதுறைமூட்டம் என்ற தலைப்பில் நாகார்ஜ÷னன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
முதலில் அவர் கூட்டத்திற்கு வந்திருந்து பேசுவதற்கு விருப்பப்படவில்லை.  ஆனால் என் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் பேச ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் தனியாக மேடை மாதிரி ஒரு இடத்தில் பேச விருப்பப்படவில்லை.  நானும் அப்படியெல்லாம் இல்லை.  எல்லோரும் சமமாகத்தான் அமர்ந்துகொண்டு பேசுவோம் என்றேன். 
நான் காமெராவில் அவர் பேச்சை பதிவு செய்ய நினைத்தேன்.  அவர் வேண்டாம் என்றார். பின் அவர் பேசியதை ஒலிப்பதிவு செய்தேன்.  சிலர் சொன்ன பதில்கள் அவரை ஆத்திரமடையச் செய்தது.  அவர் கோபம் எனக்கு ஆச்சரியம். 
நான் இதுமாதிரியான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறேன்.  இதற்குக் கூட்டம் வருவதைப் பற்றியும் வராமல் போவதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை. 
மேலும் கூட்டத்திற்கு வருபவர்களை நான் மதிக்கிறேன்.  இலக்கியக் கூட்டம் நடத்தினாலும் நானும் பங்கு கொள்ளும் ஒருவன் அவ்வளவுதான்.  
அடுத்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன்.  

Comments