Skip to main content

துளி : 12 - நகுலன் வேடிக்கையானவர்



அழகியசிங்கர்



நகுலன் கவிதை எழுதுவதாகட்டும், கதை எழுதுவதாகட்டும் எதாவது ஒரு சோதனை செய்துகொண்டிருப்பார்.  ஜனவரி 1986 ஞானரதம் பத்திரிகை க நா சு ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்து கொண்டிருந்தது. 
அப் பத்திரிகைக்கு நகுலன் ஒரு வரிக் கவிதைகளும், இரண்டு வரிக் கவிதைகளும் அனுப்பி இருந்தார்.  ஒரு வரிக் கவிதைகளை இங்கே அளிக்க விரும்புகிறேன்.
ஒரு வரிக் கவிதைகள்


1. உடைமை என்பது உன்னுள் இருப்பது

2. நான் நானாக ஒரு ஜீவித காலம்

3. பிரம்மாண்டமான விருட்சங்களில் சிதில ரூபங்கள்
4. காலம் ஒரு கலைஞன்

5. வாடகை வீடு காலியாகிவிட்டது

6. கடைசி அத்தியாயம் : கவிதை முடிந்து விட்டது.


நீங்களும் இதுமாதிரியான கவிதைகளை இங்கே எழுத முடிந்தால் எழுதி அனுப்புலாம்.  இதோ நான் முயற்சி செய்கிறேன்.


1. கூடிய மட்டும் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள்

2. அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.  யூ டூ என்றாள்.

3. ஜாக்கிரதை : மாடிப்படிக்கட்டுகளில் ஏறுவதும் இறங்குவதும்

4. வெறுமனே இருந்தது அறை

5. ஒன்றுமில்லை நிஜமாக.

6. பிரிந்தவர் கூடினாலும் கூடியவர் பிரிந்தாலும் வருத்தம்தான்.

நீங்களும் அனுப்பலாம் 




Comments