Skip to main content

நிவர் புயல்

அழகியசிங்கர்







எங்கிருந்தோ பதுங்கி பதுங்கி
எங்களைத் துடிக்க விட்டாய்
    **
எப்போதும் போல் தோன்றி 
இந்த முறை ஒன்றும்
செய்யாமல் விட்டுவிட்டாய்
உமக்கு நன்றி.  கருணை வைத்ததற்கு
    **
உன் பாதை எங்கோ கிளம்பி
எங்கோ செல்வதுதானே 
இந்த முறை மட்டும் “
சரியான பாதையில் பயணம் 
செய்து விட்டாய் ஏன்?
    **
உனக்கு யார் இந்தப் பேர் வைத்தது?
நிவர் என்று
என்னால் ஞாபகப்படுத்திக்கொண்டு
ஒவ்வொரு முறையும் சொல்ல முடியவில்லை
    **
ஏற்கனவே கொரானா பயத்தில்
வீட்டில் இருக்கிறோம்
இன்னும் 
உன் பயத்தால் இன்னும் இன்னும்
இருக்கிறோம். 
     **
நிவர் நீ வந்தாலும் வந்தாய்
நாங்கள் கவிதை எழுதப் 
பாடுபொருளாக மாறிவிட்டாய்
      **
நல்லது “
உன்னைப் பற்றி
எழுதப்பட்ட கவிதைகளைப் 
படித்துப் படித்து 
நீ ஓட்டம் பிடித்து விட்டாய்.

26.11.2020 (வியாழன்) 



Comments