Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 3

அழகியசிங்கர் 


ராஜன் ஆத்தியப்பன் கவிதை 




   மிருக காட்சி சாலைக்கு
குழந்தை குட்டியோடு குடும்பமாய்
சென்றிருந்தோம்

சதுர வடிவிலான வானத்தில்
அலுப்புடன் தாவின பறவைகள்

பறவைகளை வளர்ப்பவர்கள்
இறுகிய முதுகுடையவர்கள் என்றானொருவன்

ஓவியத்தில்தான் சிங்கம் அழகு
சிறுமியொருத்தி

பெயரிட்டக்
கண்ணாடிப் பேழைகளில்
சீறித்தளர்ந்த பாம்புகள்
பாம்புகள் போலவேயிருந்தன

கல்லெறியாதீர்கள்
அறிவிப்புப் பலகை
கானக நதியொன்றை வெயிலில் தியானிக்கும்
முதலைகளை
கல்லெறிந்து உணர்விக்கலாமென
ஊமை மொழி சொன்னது

நன்றி : கருவிகளின் ஞாயிறு - கவிதைகள் - ராஜன் ஆத்தியப்பன் - 80 பக்கங்கள் - விலை ரூ.80 - படிகம் வெளியீடு, 4 - 184 தெற்குத்தெரு, மாடத்தட்டுவிளை. வில்லுக்குறி - செல் : 9840848681

Comments