Skip to main content

அக்டோபர் மாதக் கதை.......






அக்டோபர் மாதம் சிறந்த கதையாக பெருமாள் முருகனின் ஆசை முகம் என்ற சிறுகதையைத் தேர்ந்தெடுத்தோம். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும் கூடவே சில சிறப்பான கதைகளை தள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. அக்டோபர் மாதம் பெருமாள் முருகனின் கதையைத் தேர்ந்தெடுக்கும் முன் சிறந்த கதைகளை இரண்டை பாவண்ணனும், அகஸ்தியம் என்ற ஒரு கதையை வண்ணதாசனும், அதேபோல் அபிமானியும் எழுதி இருந்தார்கள். ஆனால் எங்கள் முடிவு பெருமாள் முருகனின் ஆசை முகம் கதையுடன் நின்று விட்டது. 



மாதெரரு பாகன் என்ற நாவல் பிரச்சினையால் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை விலக்கிக் கொள்வதாக சொல்லிவிட்டார். அதனால் மேலே குறிப்பிட்ட ஆசைமுகம் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்தாலும், பெருமாள் முருகன் முடிவால் நாங்களும் அந்தக் கதையை எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அக் கதைக்குப் பதிலாக 15.10.2014 ஆனந்தவிகடன் இதழில் வெளியான பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பாவண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

Comments