Skip to main content

அலைதலின் முற்றுகை


அலைதலின் முற்றுகை 

கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த 
மனம் எனது 

தவறவிட்ட 
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை 
மழையும் வெயிலும் 
துரத்திக் கொண்டிருக்கிறது 

மேல்நோக்கி 
கீழிறங்கி 
அந்தரத்தில் மிதந்து அலையும் 
இறகு ஒன்றினைத் தனதாக்க 
நெஞ்சு விம்ம விம்ம 
கைகளை நீள.. நீள... நீட்டுகிறேன் 

ஓணான் அடிக்கும் குழந்தைகளை 
யதேச்சையாய்க் கடக்கிறேன் 

தொப்பலென 
உனதான எனக்கானத் தாய்மடியில் 
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்

*** 

--ஆறுமுகம் முருகேசன் 

Comments

Popular posts from this blog