Skip to main content

வெயிலிலிருந்து மற்றொன்றாக





பகலின் சுவர்களில்
பட்டுத்  தெறிக்கும்
வெயில்
வாலாட்டுகிறது
ஒரு நாயின்
நிழலில்


சித்திரக்கோடுகளை  தீட்டி
நெளிகிறது
ஒரு சாளரத்தின்
 நிழலில்


மரத்தில் இருந்து
ஒரு துண்டாய்  உடைந்து
ஊர்ந்து பறக்கிறது
ஒரு பறவையின்
நிழலில்


அன்பொழுக
தன் குட்டியை நக்கி
கொஞ்சி மகிழ்கிறது
ஒரு பூனையின்
நிழலில்


கருவை சுமந்தபடி
பெருமூச்செடுத்து நடக்கிறது
ஒரு கர்பிணியோடு

ஒன்றிலிருந்து மற்றொன்றாக
மாறி மாறி
பயணித்த வெயில்
கடலில்  விழுந்து
பிரசவிக்கிறது
எண்ணிக்கையற்ற விண்மீனை

Comments

Popular posts from this blog