Skip to main content

பிறிதொன்று




கோலமிட குனிந்தவள் மீது
பனித்துளி விழுந்தது

ஊரையே கழுவி
துடைத்து வைத்திருந்தது
நேற்றிரவு பெய்த மழை

சகதியில் உழலும் பன்றிகள்
சந்தன வாசனையை அறியாது

நரகல் தின்னும் நாய்
காலை வேளையில்
குளத்துக் கரையையே
சுற்றி வரும்

காற்று கேட்ட கேள்விக்கு
விடைதெரியாமல்
மரங்கள் இலை உதிர்த்தன

வெண்மேகம் மயிலுக்கு
என்ன துரோகம் செய்தது

வீதியில் நடப்பவர்கள்
மற்றவர் முகம் பார்த்து
நடப்பதில்லை

நெல் கொறிக்கும்
சிட்டுக்குருவி
எப்படி விளைந்ததென்று
அறியாது.

Comments

அறியாமலேயே நடக்கின்றன அனைத்துமே...நன்றிகள்
ஹ ர ணி said…
எதார்த்தம் என்றாலும் அதற்குள்தான் இயங்கவும் வாழவேண்டியிருக்கிறது. பிறிதொன்றின் இடரையும் துயரையும் பிறிதொன்றின் ஆறுதலில் பெற்றுவிடுவதால்.