Skip to main content

லதாமகன் கவிதை

அந்த நிலத்தில்
ஒரு பொம்மை இருந்தது.

பிறகு
ஒரு குடில் இருந்தது

பிறகு
ஒரு இடிபாடு இருந்தது

பிறகு
சில பிணங்கள் இருந்தது

பிறகு
ஒரு பங்கீடு இருந்தது

பிறகு
நிறைய சமாதி இருந்தது

பிறகு
ஒரு பிரளயத்தில் எல்லாம் அழிந்தது

பிறகு
அங்கு கடவுள் வந்தார்.

Comments

அருமையான வெளிப்பாடு
நல்ல கவிதை
பிறகு கடவுள் வந்தார். நல்ல கவிதையாவது தந்தார்.
குமரி எஸ். நீலகண்டன்