Skip to main content

மூன்று கவிதைகள்


விஜய தசமி

சென்ற விஜயதசமி
கடல் கடந்த
சீதள பூமியில்
இன்று இங்கே
சொந்த வீட்டில்
பூஜையறையில்
யாருமில்லாத
தந்நதனிமை
முன்னால்
வாக்தேவதை
நீ
சுற்றி ஏனைய
தேவதைகள் தேவர்கள்
வெளியில் வீதியில்
வாகனங்களின் சந்தடியில்
உள்ளே மனப்பாதையில்
வாழ்வின் கசப்புக்களில்

வழுதிச்செல்லும் மனதை
பிடித்திழுத்து
உன் பாதசரணத்தில்
உன் வீணைநாதத்தில்
கரைத்திடும்
விடாமுயற்சி
வெற்றிபெற


பெயரினை நீக்கிய பிறகும்


செத்தபின் சிவலோகம் வைகுண்டம்
இல்லை நரகமோ போவது இருக்கட்டும்
விட்டுவந்த வெறுங்கூண்டை
கண்ணாடிப்பேழைக்குள்
காட்சிப்பொருளாக்கி
ஊரூராய் இழுத்துவந்து
விழாவெடுப்பதும்
கட்டையில் வெந்தபின்னர்

கலையங்களிலாக்கி
இங்குமங்கும் இறைப்பதும்
பத்திரப்படுத்துவதும்
அங்கிங்கில்லானபடி
எங்குமே நிறைந்திடும்
ஆத்மாவின்
சாந்திக்கா இல்லை





ஹரி ஸ்ரீ கணபதாயே நமஹ


இன்னுமொரு விஜயதசமி
வாக் தேவதையே
உன் முன,
வாக்குகள் வந்தழுத்தி
திக்குமுக்காடித்திணறிப்
பரிதவித்த நாட்கள
பழங்கனவாய்
இன்று
வாக்குகள் வழுதிச்செல்லும்
சூன்யமான
வற்றிவரண்ட நெஞ்சமுடன்
வீற்றிருக்கிறேன்
எழுத்தாணி கையிலெடுத்து
உனை முன்நிறுத்தி
எண்ணும் எழுத்தும்
கற்பித்த
ஆதிநாளில்
ஆசான் மடியிலிருந்து
அவர் கைபிடித்து
புத்தரிசி பரப்பிய
தாம்பாளத்தில்
தங்கமோதிரத்தால்
கிறுக்கிய
அதே வரியை
கிறுக்குகிறேன்
ஓம் கணபதாயே நமஹ

Comments

Popular posts from this blog