Skip to main content

காக்கை கூடு





எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில்
புதிதாக
இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன .

காக்கைகளினால்
பொழுதுகளில் சங்கடமும்
சமயங்களில் பலன்களும் வரலாம் .

நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை
இன்றே
கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் .

தப்பித்தவறி
எச்சமிட்டுவிட்டாலும்
நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு
பட்டம் கிடைக்கும் .

கூட்டிலிருந்த
கருவேல முள் விழுந்து
முற்றம் முழுவதும்
குப்பையாகிரதென்பாள் .

துணி தொவைத்து ஒன்றைக்கூட
மரத்தடியில்
காயபோட முடியவில்லை என்பாள் .

காக்கை என்பதை
அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு
எப்படி புரியவைப்பது ?
இந்த கூடு
நிறைய நேரங்களில்
இருக்கும் வரை சொறுவைத்த
அம்மையை
நினைவுபடுத்துகிறதென்பதை.



Comments

ஜெனோவா, நல்லா இருக்கு
ரொம்ப பிடிச்சிருக்கு ஜெனோ.
ஆசிரியர் அழகிய சிங்கர் அவர்களுக்கு ,
உங்களின் இந்த ஊக்கங்களுக்கு என் நன்றிகள் பல .
மண்குதிரை & பா.ரா சார் , ரொம்ப நன்றி மக்கா..
உங்களின் தொடர் உந்துதல் என்னை மேலும் செதுக்கிக்கொள்ள ரொம்ப பயனுள்ளதாயிருக்கிறது .
உங்களுக்கு என் அன்பும் நன்றியும் .
anujanya said…
இன்றைக்குத்தான் படித்தேன். நல்லா இருக்கு ஜெனோவா.

அனுஜன்யா
ரொம்ப நன்றி சார் !