Skip to main content

பச்சை விளக்கு சிவப்பு வெளிச்சம் !

இரண்டு பகலில்
ஒன்று இருண்டு போனது
இரண்டு சுடரில் ஒன்று
உருண்டு போனது
இரண்டு வாழ்வில் ஒன்று
துவண்டு போனது
இரண்டு வழியில் ஒன்று
புரண்டு போனது
விரும்பா வாழ்வில்
திரும்பாப் பயணம்
உருகித் திரும்ப
திரளும் மரணம்
தொலைந்த சாவி
நுழையும் பிரதிகள்
பூட்டுப் பழுதாகும்
நாளை நோக்கி
கதவின் தியானம்

வாயைக் கட்டி
வயிற்றைக் கழுவி
ஆடை மறைத்து
மானம் துறந்து
கற்பின் மேல் பக்தி
நெருங்க மனமில்லை
அதை விட்டே
ஓடிப் போகிறேன்
ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன்
ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்
ஒருவர் தான்
நன்றி கடவுளே
வாழ்வு ஒன்று தான்
சாவும் ஒன்று தான்
நீயும் ஒன்று தான்...

Comments

Anonymous said…
kavithai nala thaan iruku.......

konjam ennakum puriyira maadhiri simple kavithaiyum eludhunga...... please
Haris Prem said…
Fine bro.......... your contributions to the secular is MUST........PREM
Anonymous said…
தொலைந்த சாவி
நுழையும் பிரதிகள்
பூட்டுப் பழுதாகும்

These lines focus the fact that accepting God's Will in our life is the RIGHT KEY to true happiness.All other 'duplicate efforts' will only spoil the lock -our life.