அழகியசிங்கர் இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள். ஒருமுறை நண்பர்களுடன் அவரைச் சந்தித்தப் போது, அவர் பேசியது ஞாபசகத்திற்கு வருகிறது. அன்று தனக்குப் பிற்நத நாள் என்று கூறினார். கூடியிருந்த நாங்கள் அவரை வாழ்த்னோம். அப்போது அவர் சொன்னார். இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்று குடும்பத்தாரிடம் சொன்னேன். அவர்கள் கண்கலங்கினார்கள் என்றார். “ உண்மையில் ஞானக்கூத்தன் வயது இப்போது 82 வயதாகியிருக்கும். எப்போதும் அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் படிக்கும்போது புது புது அர்த்தங்கள் தொனிக்கும். பெரும்பாலோர் அவர் ஆரம்பக்காலக் கவிதைகளை மட்டும் கூறுவார்கள். புதிதாக அவர் எழுதிய கவிû8தகளைக் கூறவே மாட்டார்கள். வித்தியாசமான நான் பிற்காலத்தில் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். உணவு மேஜை என்ற கவிதையைஇங்குக் குறிப்பிட விரும்புகிறேன். உணவு மேஜை ஓவியத்தில் தெரியும் சுடரைப் பார்த்துத் தியானத்தில் உட்கார்ந்திருந்தார் சு.ரா மௌனி சுசீலா உள்ளே நுழைந்தார் சு.ரா.மனைவியைக் கூப்பிட்டு இருவருக்கும் தோசை வார்க்கச் சொன்னார் திருமதி சு.ரா. வியந்தார் மௌனி ஒருவர்தான் இருந்தார் இவரோ இருவர்க்கும் என்...