Skip to main content

 
07.10.2020




துளிகள் 148 - இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்...




அழகியசிங்கர்



    ஞானக்கூத்தன் பிறந்த நாள் இன்று.  அவர் 1938ல் பிறந்தவர். இப்போது இருந்திருந்தால் 82 வயதாகியிருக்கும்.

    1988ஆம் ஆண்டு விருட்சம் என்ற சிற்றேடு நடத்தும் போது எனக்கு நெருக்கமாக சில எழுத்தாள நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.   அதில் ஞானக்கூத்தன் முதன்மையானவர். பலர்  தவறுதலாக விருட்சம் பத்திரிகையை ஞானக்கூத்தன்தான் நடத்துகிறார் என்று சொல்வார்கள்.

    நான் இல்லை இல்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.  ஞானக்கூத்தன் போல இன்னும் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகம்.

    பிரமிள், வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், நகுலன், காசியபன், ஐராவதம், ஸ்டெல்லா புரூஸ் என்று பலர் எனக்கு நண்பர்கள்.  இவர்கள் எல்லோரும் என்னை விட மூத்தவர்கள்.

    இவர்கள் மூலம் நான் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். விருட்சம் வரும் ஆரம்ப ஆண்டுகளில் ஒவ்வொரு இதழிலும் ஞானக்கூத்தன் கவிதை இடம் பெறாமலிருக்காது.

    அவர் ஒருநாள் பீச்சில் பேசிக்கொண்டிருந்தபோது என் கைக்குத் தங்கக் காப்பு போட வேண்டுமென்று அன்று கூடிய நண்பர்கள் முன்  சொன்னார்.  என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

    முழு மூச்சாகக் கவிதையைப் பற்றிச் சிந்தித்து கவிதைகள் மட்டும் எழுதி தன் வாழ் நாளைக் கழித்த ஞானக்கூத்தனுக்குக் குறைந்த பட்சம் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்திருக்க வேண்டும்.

    நண்பர் ஜெயமோகன் விஷ்ணுபுர விருது கொடுத்து கௌரவம் செய்தது மறக்க முடியாதது.  நண்பர் வினோத் அவரைக் குறித்து ஒரு ஆவணப் படம் எடுத்து கௌரவம் செய்தார்.

    ஞானக்கூத்தனைப் பற்றிப் பேசும்போது அவர் ஆரம்பக் கால கவிதைகளை மட்டும் குறிப்பிட்டு ஓடிப் போய்விடுவார்கள்.

    கடைசிவரை அவர் சிறப்பாகக் கவிதை எழுதி உள்ளார்.

    நகுலனின் சுசீலா

    நான்கைந்து ரூபாய்கள் செலவழித்தால்
    கும்பகோணத்துக் கடைத் தெருவை
    வாங்கிவிடலாமென்று
    கனவு கண்ட சோமு முதலியார்
    கடைசியில் சோமுப் பண்டாரமாகி
    திடீரென ஒருநாள் செத்துக் கிடந்தார்

    சுசீலாவும் ஒருநாள்
    செத்துக் கிடந்ததாய்
    நகுலன் சொன்னார்
    சுசீலாவின் ரோமபந்தி
    தனியாய்க் கிடந்ததாய்க்
    கூறவும் செய்தார்.
    ஆனால் சுசீலா போனது
    தெருவிலா வீட்டிலா




    
    
    
    
    
    
    
    
    
    
    



Comments