அழகியசிங்கர்
	உலகப் பூனைகள் தினம் இந்த மாதம் 8ஆம் தேதி முடிந்து விட்டது.  
	வரும் வெள்ளிக்கிழமை பூனைகளைப் பற்றி கவிதைகள் வாசிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.  இதுவரை விருட்சம் சார்பில்  நடைபெற்ற  கவிதைக் கூட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதைகள் வாசித்து கவிஅரங்சத்தைக்  கௌரவப்படுத்தி உள்ளார்கள்.
	அவர்களில் பெரும்பாலோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச்  சிறப்பாக்குவார்கள் என்று நினைக்கிறேன்.
	இன்னும் புதியவர்கள் சிலரும் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள்.  விருட்சம் கவிதை வாசிப்பு என்ற பெயரில் ஒரு வாட்ஸ்  அப்  குழு உருவாக்கியிருக்கிறேன்.  கவிதைகள் வாசித்த எல்லோருடைய பெயர்களையும் அதில் சேர்த்துள்ளேன். 
	ஒரு குழுவாகச்  செயல்பட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.
	பூனையைப் பற்றி கவிதை வாசிக்கக்  குறைந்தது 60பேர்களாவது வருவார்கள் என்று நினைக்கிறேன். 
	எல்லோரும் ஒருமுறைதான் ஒரு கவிதைதான் வாசிக்க இயலுமென்று நினைக்கிறேன்.
	பூனை வாழ்க.  மியாவ் .  (பாஸ்கரனின் பூனைப்படம்)

Comments