Skip to main content

நீங்களும் படிக்கலாம்......



அழகியசிங்கர்


சமீபத்தில் நான் எழுதிய புத்தகம்தான் நீங்களும் படிக்கலாம் என்ற புத்தகம்.  கடந்த ஓராண்டாக 3000 பக்கங்களுக்கு மேல் 20 புத்தகங்கள் படித்துள்ளேன்.  அவற்றை குறித்து நான் எழுதிய கட்டுரைகளே நீங்களும் படிக்கலாம் என்ற புத்தகம்.  90 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரு.60 தான்.  புத்தகம் வேண்டுபவர்கள் 9444113205 என்ற தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும்.
புத்தகத்தில் நான் எழுதிய என்னுரையை இங்கே தருகிறேன்.

போன ஆண்டு ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்குப் போயிருந்தேன். படிக்க அவருடைய நாவலை வாங்கினேன்.  அதைப் படிக்க ஆரம்பித்தபோது, அது குறித்து எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது. ஒரு வாசகனாக.   அந்தப் புத்தகம் பற்றி எழுத ஆரம்பித்ததுதான் இநதப் புத்தகத்திற்கு ஆரம்பம்.  எல்லோரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப் பட்ட கட்டுரைகள்தான் இவை.  
நான் தொடர்ச்சியாக புத்தகங்களைப் படித்து வருகிறேன். பெரும்பாலான நேரம் படிப்பதில் போய்விடுகிறது. போன ஆண்டில் கிட்டத்தட்ட 3000 பக்கங்களுக்கு மேல் நான் படித்த 20 புத்தகங்களின் விபரங்கள்தான் üநீங்களும் படிக்கலாம்ý என்ற இந்த சிறிய நூல். ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதிய பிறகே இன்னொரு புத்தகம் படித்து முடிக்கிறேன்.  இதுதான் இந்தப் புத்கம் வருவதற்கான பின்னணி.  எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்பிராயங்களை நான் நவீன விருட்சம் பிளாகிலும், முகநூலிலும் பதிவு செய்வது வழக்கம்.  அப்படிப் பதிவு செய்ததைத்தான் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.
புத்தகம் குறித்து எழுதுவதில் என் முன்னோடி க.நா.சு தான்.  அவருக்கு இப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்துள்ளேன். üமுழு நேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம்ý என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் க.நா.சு. வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்.  
மரணம் அடையும் தறுவாயில் கூட தமிழில் எழுதிக்கொண்டிருந்த பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறார். தமிழுக்கு அவர் செய்த தொண்டை யாரும் மறந்து விட முடியாது. 
                                                                                                                                      அழகியசிங்கர்
 25.03.2016

Comments