Skip to main content

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்



அழைப்பு 



நீலமணி

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள்
வலியுறுத்துகின்றன
வாயேன்


இயற்கை

நா ஜெயராமன்

நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்,
வேப்பமரக் கிளை நிழல்
நோட்டீசாக் படிந்திருந்தது



1971ஆம் ஆண்டு வந்த ஒரு ரேடியோ விளம்பரத்தைக் கேட்டு நீலமணி எழுதிய கவிதை அழைப்பு கவிதை.  இன்று அதன் அர்த்தம் மாறிப் போய்விட்டது.   காலம் மாற மாற சில கவிதைகள் தன் தன்மையை இழந்து விடுகின்றன.  நீலமணி கவிதை அதற்கு ஒரு உதாரணம் என்று தோன்றுகிறது.
அதே சமயத்தில் நா ஜெயராமனின் இயற்கை என்ற கவிதை இன்னும் வாசிப்பு அனுபவத்தை பலப்படுத்துகிறது.  2015லும் இக் கவிதை பொருந்தி போய்விடுகிறது.  கவிதை என்பது காலத்தைக் கடந்து நிற்க வேண்டும்.
ஜøன் 1971 மாத கசடதபற அட்டைப் படத்தை வரைந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.

Comments