நிழற்படங்கள்          எம் . ரிஷான் ஷெரீப்        நான்  அப்படிக்  கேட்டிருக்கக்  கூடாதுதான் . மிகவும்  சோகத்துக்குள்ளான  அந்த  நண்பரது  கண்கள்  எனது  கண்களை  நேரே  பார்த்தன . பின்னர்  தாழ்ந்துகொண்டன . அறையிலிருந்த  என்  கணவர்  ' என்னடா  இது ?' என்பது  போல  முறைப்புமில்லாமல்  அதிகளவான  திகைப்புமில்லாமல்  கேள்வியோடு  என்னைப்  பார்த்தார் . ' பொண்ணு  வீட்டுக்கும்  இந்த  போட்டோவைத்தான்  கொடுத்தீங்களா ?' என்ற  எனது  கேள்வி , இயங்கிக்கொண்டிருந்த  குளிரூட்டியின்  சத்தத்தோடு  யன்னல்களேதுமற்ற  அந்த  அறையின்  எல்லாப்பக்கங்களிலும்  பதில்களற்று  உலாவருமென  எனக்கு  எப்படித்தெரியும் ? நான்  விளையாட்டாகத்தான்  அதைக்  கேட்டேன் .       சில  நிகழ்வுகளையொட்டிக்  கேள்விகள்  தானாக  உதித்துவிடுகின்றன . எல்லாக்  கேள்விகளுக்கும்  எல்லோரிடமும்  பதில்கள்  இருப்பதில்லை . சொல்ல  வேண்டிய  பதில்களைக்  காலம்  கொண்டிருக்கும் . அதன்  வாய்க்குள்  புகுந்து  விடைகளை  அள்ளிவர  எல்லோராலும்  இயல்வதில்லை . அவ்வாறு  இயலாமல்  போனவர்கள்  மௌனம்  காக்கிறார்கள் . இல்லாவிடில்  சிரிக்கிறார்கள்  அல்லது  அழுக...