Skip to main content

மரம் பெய்யும் மழை


மழை பெய்யத்
தொடங்கியதும்
மரம் பெய்யவில்லை
மழையை...
மழை நின்று
வெகு நேரமாகியும்
மரம் பெய்து
கொண்டே இருக்கிறது
மழையை பெரிய
பெரியத் துளிகளுடன்.
பூப்பெய்த மரங்கள்
பூ பெய்கின்றன
மழையோடு.
பூப்பெய்தாத மரங்கள்
இலைகளைப் போட்டு
விளையாடுகின்றன
போகும் நீரில்

Comments

manasellam mazhai peigirathu .meendum meendum maram peyyum mazhaiyil nanaigiren
Anonymous said…
என் மனதில் வான் பெய்த மழை, மரம் பெய்த மழை - இரண்டும் நின்றபாடில்லை.