பனிக்குஞ்சொன்று கண்டேன். சூரியன் சுட்ட கருஞ்சாம்பலை விலக்கி வெண்ணொளி வீசி வீதிக்கு வந்தது. குளிர்ந்து செழித்தது காடும் நாடும். வெண்ணிலா அதுவென்று சொன்னேன். வியந்து உயரப் பார்த்தவர் விழிகளுள் பனிக் குஞ்சினை புதைத்து வைத்தேன். நாளுக்கு நாள் வளரும் குஞ்சோடு விரியும் ஒளியில் வெளிகளும் வளர்ந்தன.. விண்மீன்களும் குஞ்சுடன் கொஞ்சி களித்தன.