Skip to main content
அந்த நகரத்தின் நடுவே 
ஒற்றை அடையாளமாய் 
இருந்த அந்த 
பழைய அரசமரமும் 
அன்று வெட்டி 
சாய்க்கப் பட்டது.  
கிளையோடு விழுந்த 
கூட்டின் குஞ்சுகளுக்கு 
நிலாவைக் காட்டி 
நாளை அந்த 
கூட்டிற்கு போகலாம் 
யாரும் எதுவும் 
செய்ய முடியாதென 
சமாதானம் கூறி 
வாயில் உணவை 
ஊட்டிற்று தாயன்போடு
காகம்.  
 
 
 
 
 
Popular posts from this blog
  
 
 
 
 
 
 
Comments