Skip to main content

கவிதை

பெரியசாமி 
இரு கோப்பைகளில்
கடலை ஆற்றிக்கொண்டிருந்தவனிடம்
வேறெங்கு வாழ்வதென
போராடின மீன்கள்
மனமுடைந்த முதலைகள்
தற்கொலை பூண்டன
போக்கிடமற்று அலைந்தன
பிற ஜீவராசிகள்
கூடை கூடையாய் எல்லோரும்
புசிக்கத் துவங்கினர்
மலிவு விலையில் மீன்களை

Comments

மதி said…
அருமையான ஆரம்ப வரிகள் .. சட்டெனக் கவர்ந்து விட்டன .. நல்ல கருத்தும் கூட