Skip to main content

1. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறு வெளி

ஒரு தவம் போல் நிகழ்த்தப்பெறும்

பறத்தல் ஸ்தம்பிக்க

திடும்மென பற்றி இறுக்குகிறது

வல்லூறு அதன்

கூர் நகங்களின் பிடி.



படபடத்தினி அடங்கிவிடும்

சாம்பல் நிறப்புறாவின்

சிறகுகளுக்கான

சிறு வெளியை

அந்நொடி,

திரும்பப்பெற்றுக்கொள்கிறது

அண்டப்பெருவெளி.

Comments