Skip to main content

வானுக்கு கீழே அதன் வாழ்க்கை


கீழே குனிந்தவுடன்
பின்வாங்கி ஓடும்
நாம் கல்லைத்தான் தேடுகிறேதம்
என்று நினைத்து
நேருக்குநேர் அதன் கண்களை
சந்தியுங்கள்
புனிதப் பேதருக்கே தயாராகும்
அந்த நாய்கள்
எதையுமே அதன் கண்களால்
காணமுடியுமென்பதால்
அது எதையுமே கண்டு
ஆச்சர்யம் கெதள்வதில்லை
வெட்கம் கெதண்டு,
மனிதர்களைப் பேதல்
அது காமத்தைக் கூட
மூடி மறைப்பதில்லை
வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
திறந்த புத்தகமாய்...
சுவர்களுக்கு மத்தியில் தங்களை
மறைத்துக் கெதள்ளும்
மனிதர்களைக் கண்டு
எள்ளி நகையாடுகின்றன
வீதியில் படுத்துறங்கும் நாய்கள்.

Comments

Chandran Rama said…
தேடுகிறேதம்
பேதருக்கே
கெதள்வதில்லை
கெதண்டு
பேதல்
கெதள்ளும்.....

guess something gone wrong somewhere..!!!!

This poem reminded me of "NADUNISI NAIHAL" by Pasuviah