Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......2




நான் நேற்று இதை டைப் அடிக்கும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இப்போதும் 10 மணி. அதனால் கொஞ்சம் அடித்துவிட்டு நிறுத்தி விட்டேன். நானே பல விஷயங்களை இப்படி blogல் அடிப்பது சந்தோஷமாக உள்ளது. இதை சிலபேர்கள் படிக்கிறார்கள். இப்படி அடிப்பது முன்பெல்லாம் கிடையாது. பெரும்பாலும் பத்திரிகையில் பிரசுரம் ஆவது நடக்காது. நான் கவிதைகள் எழுதி அதைப் பிரசுரம் செய்ய சரியான பத்திரிகை இல்லை என்பதால்தான் நவீன விருட்சம் ஆரம்பித்தேன். என்னைப்போல் பல நண்பர்கள் கவிதைகளையும் பிரசுரம் செய்ய வழி தெரியவில்லை. அப்படி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் நவீன விருட்சம்.


அந்தப் பத்திரிகை ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளையும் பிரசுரம் செய்ய வழி இல்லை என்பதுதான். என் பத்திரிகையின் 2 வது இதழின்போது க.நா.சுவை மயிலாப்பூரில் சந்தித்தேன். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. அவரிடம் விருட்சத்திற்கு எதாவது விஷயதானம் செய்ய முடியுமா என்று கேட்டேன். உடனே ஒரு கட்டுரையை பையிலிருந்து எடுத்துக்கொடுத்தார். எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். நான் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யவில்லை.


புதுக்கவிதைக்கு முக்கியமானவர்கள் என்று மூன்று பெயர்களை மட்டும் அவர் குறிப்பிட்டிருந்தார். என் நண்பர்கள் பலர், அவர் கட்டுரையில் குறிப்பிட்டது சரியில்லை என்று வாதிட்டார்கள். எனக்கோ க.நா.சு எது எழுதிக்கொடுத்தாலும் பிரசுரம் செய்ய வேண்டுமென்று தோன்றியது. இரண்டாவது இதழில் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யவில்லை. ஆனால் அக்கட்டுரை ழ என்ற சிற்றேட்டில் வெளிவந்துவிட்டது. 3வது இதழ் போது க.நா.சு இறந்து விட்டார். அட்டைப் படத்தில் ஆதிமூலம் வரைந்த புகைப்படத்தை பிரசுரம் செய்தேன். (ஆதிமூலம் வரைந்த இன்னொரு படத்தை சு.ராவின் காலச்சுவடிற்குக் கொடுத்துவிட்டேன்).


நான் திரும்பவும் பிரமிள், விசிறி சாமியாருக்கு வருகிறேன். பிரமிளுக்குக் கூட பத்திரிகையில் பிரசுரம் செய்ய பத்திரிகைகள் எதுவுமில்லை. விருட்சம் இதழில் கூட 9வது இதழில்தான் அவர் படைப்புகளைப் பிரசுரம் செய்ய முடிகிறது. சிறுபத்திரிகை சூழலில் படைப்பாளர்களிடையே உள்ள fight பத்திரிகை நடத்துவதே பிரச்சினையாகிவிடும். எந்தப் படைப்பாளியையும் பிரமிள் எளிதாக பாராட்டவே மாட்டார் என்று எனக்குத் தோன்றும். அதனால் நான் எழுதுவதை எதுவும் அவரிடம் காட்ட மாட்டேன். அவரிடம் மட்டுமல்ல பல மூத்த எழுத்தாளர்களிடம் என் படைப்புகளை நான் காட்டியதே இல்லை. மேலும் ஒருவரை பிரமிள் திட்டி எழுத ஆரம்பித்துவிட்டால் யாரும் அவர் முன்னால் நிற்க முடியாது. அப்படி திட்டிவிடுவார். பிரமிளைப் போல நான் பழகிய மற்ற மூத்த படைப்பாளிகளை அவர் திட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரமிளுக்கு புதுமைப்பித்தன் மீதும், மெளனி மீதும் அளவுகடந்த மரியாதை உண்டு.


ஆரம்ப மெளனி கதைத் தொகுதியில் பிரமிள் அவரைப் பாராட்டி எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது. மறு தொகுப்பாக மெளனி கதைகள் வந்தபோது பிரமிள் கட்டுரை பிரசுரம் ஆகவில்லை. அந்தச் சமயத்தில் பிரமிள் வெளிப்படுத்திய feeling எனக்குத் தெரியும். இது எதில் கொண்டு போய் விட்டது என்றால் மெளனி கெளனி என்று மெளனி கதைகளையே திட்டி எழுதிவிட்டார். இதுதான் அவருடைய பலம். பாராட்டியும் எழுத முடியும், திட்டியும் எழுத முடியும் அவரால். படிப்பவர்களுக்கு அவர் சொல்வதுதான் நியாயம் என்று தோன்றும். யாருக்கும் தலை வணங்காத பிரமிள் ரொம்ப மரியாதையுடன் இருப்பது, ஜே கிருஷ்ணமூர்த்தியிடமும், விசிறி சாமியாரிடமும்தான். விசிறி சாமியாரைப் பார்க்க வேண்டும் என்று பிரமிள் சொன்னபோது, முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. சாமியார்களிடம் பழகுவது சாதாரண விஷயமல்ல. நானும் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போவேன். ஆனால் தூரத்திலேயே அவர் பேச்சைக் கேட்டுவிட்டு வந்துவிடுவேன். கூட்டம் முடிந்தவுடன் ஜே கிருஷ்ணமூர்த்தியும் கூட்டத்தோடு கூட்டமாக வேகமாக நடந்து போய்க் கொண்டிருப்பார். (இன்னும் தொடரும்..)

Comments

piraisoodi said…
Thanks to share this information with us. But we Want to know about more details on pramil's work.
piraisoodi said…
Thanks to share this information with us. But we Want to know about more details on pramil's work.
BALUSWARNA said…
±ó¾¢Ãý ±ó¾Å¨¸?
Å¢ïº¡É ÅÇ÷¡ø ÓØÐõ ÁÉ¢¾ ¯½÷º¢ °ð¼ôÀð¼ «¾¢¸ ÀÄõ Å¡öó¾ ¿¢Â¡ÂÁ¸ ¦ºÂøÀÎõ ±ó¾¢Ãý Ó¾ø Ũ¸.
Åììà Ҿ¢ÔûÇ ÁÉ¢¾É¡ø ¾¢Â ±ñ½í¸Ù¼ý ¦¸¡Îà ¦ºÂø¸û ¦ºöÔõ Á¡üÈôÀð¼ ®ó¾¢Ãý þÃñ¼¡õ Ũ¸.
þÅü¨È ±øÄ¡õ Á¢¨¸ ÀÎò¾¢ À½õ ÀÄ ¦ºÄ× ¦ºöÐ «¾¢¾ Å¢ÇõÀÃõ ãÄõ Áì¸Ç¢ý Áɾ¢ø Á¢¸ ¦À¡¢Â Á¡¨Â ²üÀÎò¾¢,«ôÀÅ¢ À¡Áà þ¨Çïº÷¸û ÁÉò¨¾ ÁØí¸ÊòÐ À¡ø «À¢§„¸õ ¦ºöÔõ «Ç×ìÌ ¾ûÇôÀðÎ «Å÷¸ÙìÌ ¸¢¨¼ìÌõ ¦º¡üÀ ÅÕÅ¡¨Â ÅﺸÁ¡¸ ݨÈÂ¡Ê §¸¡Ê §¸¡Ê¡¸ Ä¡Àõ ¦¸¡Æ¢ìÌõ ±ó¾¢Ãò¾Éõ ±ó¾Å¨¸?

¿ À¡ÄÍôÃÁ½¢Âý.
¦ºý¨É .83
BALUSWARNA said…
enthiran enthavakai?
vinjaana vaLarchchiyaal muzhuthum manitha uNarchi Uttappatta athiga balam vaaintha niyaayamaga seyalpadum enthiran muthal vagai.
vakkra puthiyuLLa manithanaal thiya eNNangaLudan kodura seyalkaL seyyum maaRRappatta eanthiran irandaam vakai.
ivaRRai ellaam mikai paduththi paNam pala selavu seithu viLambaram mulam makkaLin manathil mika periya maayai ERpaduththi.
appavi paamara iLainjarkaL manaththai mazhungaTiththu paal abishEkam seyyum aLavukku thaLLappattu avarkaLukku kidaikkum soRppa varuvaayai athitha viLambaram muulam vanjakamaaka sooRaiyaadi kOdi kOdiyaaka laabam kozhikkum enthiraththanam enthavakai?

na baalasubramaNian.
chennai .83