Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 147


அழகியசிங்கர்  




காணாமல் போன ஆறு



சுரேஷ் பரதன் 


ஆதியில் அந்த ஆறு
ஓர் ஆறாகவே 
இருந்தது.

அதன் கரையில்
படகுத்துறையும் இருந்தது.

படகோட்டி ஒருவனும்
இருந்தான்

படகோட்டி
காரோட்டியான சில நாட்களில்
படகுத்துறை ஆற்றோடு
போயிற்று

படகுத்துறை போன பின்புதான்
ஆறும் காணாமலேயே
போய்விட்டது.



நன்றி : ஊர் நடுவே ஒரு வன தேவதை - சுரேஷ் பரதன் - வெளியீடு : நான்காவது கோணம் வெளியீடு - பக் : 112 - விலை : ரூ.90 

Comments

Popular posts from this blog