Skip to main content

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

 

     அழகியசிங்கர்


    சில தினங்களுக்கு முன் நான் பங்களூர் சென்றிருந்தேன். நெருங்கிய உறவில் ஒரு திருமணம்.  பங்களூரில் வசிக்கும் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  அந்தப் பேட்டி எடுத்த இடம் வேடிக்கையான இடம்.  அவரை கல்யாணத்திற்கு அழைத்திருந்தேன்.  கல்யாண சத்திரம் முழுவதும் எதாவது தனியாக அமர்ந்து பேச இடம் கிடைக்குமா என்று பார்த்தோம்.  ஒரு இடமும் கிடைக்கவில்லை.  சரி வேற வழி இல்லை என்று ஸிந்துஜா அவர்களின் காரில் அமர்ந்து பேட்டி எடுத்தேன்.  

    அந்தப் பேட்டியில் சில இடங்களில் எடிட் செய்ய வேண்டியிருந்ததால் நான் உடனடியாக அதை வெளியிட முடியாமல் தவித்தேன்.  அமெரிக்காவிலிருந்து வந்த பையனிடம் கொடுத்து இதைச் சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன்.  அவன் அதைச் செய்ததோடு அல்லாமல் என்னைத் திரும்பவும் பேசச் செய்து அதையும் ஏற்கனவே எடுத்தப் பேட்டியுடன் சேர்த்துவிட்டான்.   என்னதான் முயன்றாலும் இதை என்னால் கற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.  இதோ அந்த ஒளிப்பதிவு.  இந்தத் தலைப்பில் நான் எடுக்கும் 13வது பேட்டி இது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog