Skip to main content

ஒரு பாடம்

நவம்பர் 1970   -  கசடதபற இரண்டாவது இதழ்


தி.சோ.வேணுகோபாலன்


"போடா நாயே"
வார்த்தை 'வெள்' என்று வெடித்தது
இதயம் படபடக்க
கண்கள் சிவந்தன.
அறிவில் குறுகுறுக்கிறது
ஒரு படம்

தொழுநோய்ப் பிச்சைக்காரனை
தன் வால் தூரிகையால்
நாய்
மனிதனாய்ச் சித்தரித்தது

Comments

Popular posts from this blog