Skip to main content

இன்னும் ஒரு ...

 
A .தியாகராஜன்

எல்லாரும் போயாச்சு -
அங்கே இருந்த கடைசி நாற்காலியையும் 
தரதரவென இழுத்து மலை மாதிரி 
இருந்த நாற்காலி போர் ஒண் ணு மேல 
இடி சத்தம் மாதிரி சத்தத்தோட 
அந்த ஆள் போட்டான் .

கல்யாண மண்டபத்து ஹால் காலி 
தரை இன்னும் சுத்தம் செய்யப்படாமல் 
ஆனாலும் விழவுக்களம் கமழ்ந்து கொண்டு 
வயசான இம்ப்ரஷனை கொடுத்துக் கொண்டு ...

கட்டுசாதம் வாசல் டாக்சி ஒன்றில் அனாதையாய் -
ஓட்டுனர் ஓரக்கண்ணால் அதை அளந்து கொண்டிருந்தான்.

ஒரு டீ கிடைக்குமா என எனது குரல் 
மிகவும் க்ஷீணித்தே 
ஆனாலும் கட்டாயம் கேட்டிருக்க 
வேண்டும்-
 
பல வாழ்க்கைக் கனவுகள் 
பெண் மாப்பிள்ளை தவிரவும்  
வந்திருந்த பலர் தவிரவும் 
அந்த வராத டீ யிலும் வியாபித்து 
தனி பாதை ஒன்றில் 
ஒரு பயம் கலந்த எதிர் பார்ப்பில் 
பாதை உண்டா சேருமிடம் உண்டா 
நிச்சயம் சஞ்சலம் என்று 
அடிகள் கொண்டு ...

மிச்சம் இருப்பது 
இந்த ஹாலின் தனிமை 
மட்டுமே 
இப்போதைக்கு-

இப்படித்தான் அந்த கடைசி 
கல்யாணமா ரிசப்ஷனா 
அதிலும்- 
அதில் பெண்ணின் அப்பா 
ஒரு மௌனத்தில் தான் யார் என்று மறந்து 
தரையில் தூங் கியே விட்டார் -

ஒருவாய் வத்தகுழம்பும் சுட்ட அப்பளமும் 
போறுமென்று யாரிடம் கூவுவது 
"சீக்கிரம் கூட்டுயா
அடுத்த பார்டி மத்யானம் வந்திரும் 
அது யூனியன் மீட்டிங்யா 
டிபனோட சரி...

Comments

Popular posts from this blog