Skip to main content

ரோபோக்களின் இசைநிகழ்ச்சி

லாவண்யா
 

அப்போது
நம்மால் அடக்கமுடியவில்லை
அப்போது
நமக்கு வேறு நினைப்பேயில்லை
அதற்கு 
நாம் ஆசைப்பட்டிருக்க்கஃகூடாது
இப்போது
அப்படித் தோன்றுகிறது
நம் கதை
நெருப்பையணைக்க நெய்யூற்றியவன் கதை
நம் கதை
தேனில் விழுந்த ஈயின் கதை
எப்போதோ நாம்
பிறவிப்பெருங்கடலில் மூழ்கிப்போனோம்
மாயச்சுழலில்
மூச்சுத்திணறும் வேளையில்
ஆன்மீகச் சொற்பொழிவைக்
கேட்கப்போகலாமென்கிறாய்
பொக்கைவாயன்
முறுக்கு தின்ன ஆசைப்பட்டானாம்
இனிமேல் நாம்
ஆன்மாவையறிந்து என்ன செய்யப்போகிறோம்?
வந்த்தை மகிழ்விக்க
வாய்த்த்தை கடைத்தேற்ற
நாலுகாசுக்கு நாயாயலைந்து
சாத்தான்களுடன்
சமரசம் செய்துகொண்டபோது
நம் ஆன்மாவை
நாம்தான் தொலைத்துவிட்டோமே?
இந்திரசபையில் ஓல்ட்மாங்க்
நமக்காக்கஃ காத்திருக்கிறார்
அகாதெமியில் இன்றிரவு
ரோபோக்களின் இசைநிகழ்ச்சி
நான் என்ன சொல்கிறேனென்றால்
சத்யநாதா..........

 

Comments

Popular posts from this blog