Skip to main content

இரண்டு கவிதைகள்

பிறந்தநாள் 58

ஓடிவிட்டன

நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும்

கழுத்தில் சுருக்கம்

இளமை இன்னும் மாறவில்லை

என்று அப்போதிருந்து சிந்தனை

ஓட்டம் ஒரே மாதிரிதான்

வானத்தில் நட்சத்திரம் மின்ன

தூரத்தில் தெருநாய் குரைத்தது

வேடிக்கையாக யாரோ

கொட்டாவி விட்டனர்

இன்று 58

@@@@@@@@

ஒரு ரோஜாப்பூவை

சூடிக்கொண்டிருந்த பெண்

என்ன நினைக்கிறாள்

சீர்காழி பஸ்ஸில் ஏறி

சிதம்பரம் போகிறாளா?

வழியில் எங்காவது

இறங்கி விடுவாளா?

அலுவலகம் போகிறாளா?

வகுப்பிற்குச் செல்கிறாளா?

வீட்டிற்குத்தான் போகிறாளா?

ஒற்றை ரோஜா

புத்தம்புது மலராய் மினுமினுக்க

அவள் கன்னத்திலும்

சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?

Comments

கவிதையோடு வளர்கிறது வருடங்கள் உங்கள் இளமையான எண்ணங்களிலேறி இன்னும் மிடுக்காய்...வாழ்த்துக்களுடன்
குமரி எஸ். நீலகண்டன்
anujanya said…
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.

அனுஜன்யா