Skip to main content

Posts

புத்தக விமர்சனம் 8

அழகியசிங்கர்   இமையம் அவர்களின் 'எங்கதெ' என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது.  சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.  தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள்.  அதேபோல் தீராநதியிலும், அமிருதாவிலும் இப் புத்தகம் பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள்.  மேலும் இப் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டம் நடந்தது.   ஒருவிதத்தில் இப்படி இப் புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியானது என்று தோன்றுகிறது.  உண்மையில் நடுப்பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி இப்படி விமர்சனம் வருவது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு தமிழ் இந்து இல்லை, நூறு தமிழ் இந்துக்கள் உருவாக வேண்டும்.  நடுப்பக்கத்தில் கண்டுகொள்ளமால் விடப் படுகிற பல புத்தகங்களை எல்லோரும் எழுத வேண்டும்.  சினிமா படங்களுக்கு, சினிமா நடிகர், நடிகைக்குக் கிடைக்கிற முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும்.  இதெல்லாம் சொல்லலாம்...

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்

ஹரி : ஓம் : தத் : ஸத்                                                                                                               ஐராவதம் நெடுஞ்சாலை நடுவினிலே நான் நீண்ட நேரம் படுத்திருக்க நினைத்ததுண்டு பச்சை விளக்கு எரிகையிலே பாய்ந்து வரும் கார்கள் பஸ்கள்,  லாரிகள், டாக்ஸிகள் ஸ்கூட்டர்கள், சைகிள்கள் அத்தனையும் என் பொருட்டு நின்றுவிடும் எனக் கற்பனை செய்ததுண்டு. கடற்கரைக் கூட்டத்தில் கல்லெறிய துடித்ததுண்டு ஒளிச்சர விளக்குகள் ஒலித்துச் சிதற பலி ஆடு மந்தையென பார்த்திருப்போர் கூட்டம் ம்மே ம்மே என அலறிச் சிதற மேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ களேபரச் சந்தடியில் காற்றாய் மறைய நினைத்ததுண்டு பாட்டுக் கச்சேரியில் பட்டுப் புடவைகள் வைரத்தோடுகள் நவரத்தினக் கழுத...

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்

அழைப்பு  நீலமணி நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன வாயேன் இயற்கை நா ஜெயராமன் நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த காம்பௌண்டு சுவரில், வேப்பமரக் கிளை நிழல் நோட்டீசாக் படிந்திருந்தது 1971ஆம் ஆண்டு வந்த ஒரு ரேடியோ விளம்பரத்தைக் கேட்டு நீலமணி எழுதிய கவிதை அழைப்பு கவிதை.  இன்று அதன் அர்த்தம் மாறிப் போய்விட்டது.   காலம் மாற மாற சில கவிதைகள் தன் தன்மையை இழந்து விடுகின்றன.  நீலமணி கவிதை அதற்கு ஒரு உதாரணம் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் நா ஜெயராமனின் இயற்கை என்ற கவிதை இன்னும் வாசிப்பு அனுபவத்தை பலப்படுத்துகிறது.  2015லும் இக் கவிதை பொருந்தி போய்விடுகிறது.  கவிதை என்பது காலத்தைக் கடந்து நிற்க வேண்டும். ஜøன் 1971 மாத கசடதபற அட்டைப் படத்தை வரைந்தவர் கவிஞர் வைதீஸ்வரன்.

புத்தக விமர்சனம் 7

  அழகியசிங்கர் நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன்.  வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன்.  மின்சார வண்டியில தாம்பரம் சென்றேன்.  பஸ்ஸில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி.  எப்போதும் நான் எங்காவது போனால் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு போவேன்.  படிக்க முடிந்தால் படிப்பேன்.  ஒரு ஜோல்னாப் பையில் நான் இப்படி புத்தகம் போட்டு எடுத்துக்கொண்டு போவது என் நண்பர் ஒருவருக்குப் பிடிக்காது. நான் இந்த முறை எடுத்துக்கொண்டு போன புததகம் 'இந்தியா 1948' என்ற புத்தகம்.  அசோகமித்திரன் எழுதிய நாவல் இது. கிட்டத்தட்ட 144 பக்கங்கள் கொண்ட நாவல்.  நான் மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறியவுடன், உட்கார இடம் பார்த்துக்கொண்டு பின் நிதானமாக இந்தப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்.  என் கவனம் எல்லாம் புத்தகத்தில் இருந்தாலும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நிற்கும்போது, வண்டியில் ஏறுபவர்களைப் பார்ப்பேன்.  எந்த ஸ்டேஷனலில் வண்டி நிற்கிறது என்பதையும் கவனிப்பேன். தாம்பரம் வந்தடைந்தபோது பு...

கசடதபற மே 1971 - 8வது இதழ்

நானுமென்னெழுத்தும்                                                                                         நகுலன்      நின் கைவசம் என் கைப்பிரதி "இதனையெழுது"என்றாய் எழுதினேன். "இதனையழி" என்றாய் "அழித்தேன்" "இதனையிவ் வண்ணமெழுது" என்றாய் சொன்னவண்ணமே செய்தேன். இதுவென்னூல் இதுவென் பெயர் இது வென்னெழுத்து விமர்சனமும் விரைவில் வந்தது "ஆ என்ன வெழுத்து," என்றாரொருவர் "ஆ இதுவன்றோ வெழுத்து" என்றாரொருவர். என்எனழுத்தில் நானில்லை என்றாலுமென் பெயருண்டு எழுதியெழுதி அழித்தேன் அழித்து அழித்து ஆளானேன். விமர்சகரும் சொல்லி விட்டார் இல்லா ததையெல்லாம் உண்டென்று சொல்லி விட்டார். மாமுனி பரமஹம்ஸன் அவன் மாபெரும் சீடன் சொன்னான் "மாயை யென்பது மன்பதையனுபவம்" மாயையென்னெழுத்து மாமாயை என் வாழ்வு என்றாலு...

கசடதபற மே 1971 - 8வது இதழ்

விதி      கலாப்ரியா அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய பெண் பறவை, தன் குஞ்சுக் காய், தன் கூட்டுக்காய், அலைமோதிக் கரைகிறது. எனக்கதன் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும், இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை.

புத்தக விமர்சனம் 6

  அழகியசிங்கர் எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது என்பது தேவதச்சனின் கவிதைத் தொகுதியின் பெயர்.  எப்படி இந்தப் பெயரை தலைப்பாக தேவதச்சன் வைத்தார் என்று யோசித்தேன்.  ஏன்எனில் சினிமா தயாரிப்பாளர்கள் பார்த்தால் இந்தப் பெயரை ஒரு படத்தின் தலைப்பாக வைத்துக்கொள்ள விரும்பலாம்.   இன்று பரவலாக தேவதச்சன் பெயர் பலரால் உச்சரிக்கப் படுகின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற இதழ்களில் அவர் எழுத ஆரம்பித்தபோது, அவருடன் இன்னும் பலரும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள்.  அவர்களில் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை.  பெரும்பாலோர் கவிதை எழுதுவதை விட்டிருப்பார்கள்.   அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தேவதச்சனும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்.  1982ல் முதன் முதலாக அவருடைய கவிதைத் தொகுதி அவரவர் கைமணல் ஆனந்த் கவிதைகளுடன் சேர்ந்து வெளிவந்தது.  1982க்குப் பிறகு 2000ல்தான் அவருடைய மற்றொரு கவிதைத் தொகுதி வெளிவருகிறது.  தன்னுடைய கவிதைகள் புத்தகமாக வர வேண்டுமென்று ரொம்ப ஆர்வமாக இருக்க மாட்டார்.   அவரைப் பா...