Skip to main content

மகாத்மா காந்தி நூல் நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு..

 07.10.2021

துளி - 223

அழகியசிங்கர்


ஒருநாள் ம. நித்யானந்தம் போன் செய்தார். ஒரு பரிசு கொடுக்கப் போகிறோம் என்றார்
.
சக்தி கிருஷ்ணசாமி விருது வழங்கப் போவதாகக் கூறினார். நேரிடையாக வீட்டிற்கு வந்திருந்து அழைப்பிதழைக் கொடுத்தார்.
என் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினேன். என்னையும் ஞாபகப்படுத்துகிறீர்களே என்றேன்.
ஒரு முறை ம. நித்யானந்தம் குவிகம் கூட்டத்தில் எல்லாக் கோயில்களைப் பற்றிப் பேசினார். உண்மையில் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
உண்மையில் நான் ரொம்பவும் பக்தி உள்ளவன் கிடையாது. எனக்கு அவர் பேசியதைக் கேட்ட பின் ஒவ்வொரு கோயிலாகப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.
வருகிற (10.10.2021) பத்தாம் தேதி 69வது ஆண்டு விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா அன்று சக்தி கிருஷ்ணசாமி விருதைப் பெறுகிறேன்
ஞாயிறு காலை 10.30 மணிக்கு அருள்மிகு சொர்ணாம்பிகை திருமண மண்டபம், குளக்கரை தெரு, சைதாப்பேட்டை, சென்னை 15 என்ற இடத்தில் நிகழ்ச்சிக்கு வந்திருந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.இத்துடன் அழைப்பிதழை உங்கள் பார்வைக்கு இணைக்கிறேன்.
May be an image of 1 person
You and Rangarajan Sridhar

Comments