Skip to main content
மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2
- 115


அழகியசிங்கர்


கதவு

கல்பனா ரத்தன்




எங்கள் மூதாதையர் காலத்தில்
கதவுகள் வைக்கவில்லை.
எங்கள் பாட்டி காலத்தில்
கதவு இருந்தது மூடியே...
என் அம்மா காலத்தில்
நிழலான வெளியுலகம்
என் காலத்தில் அவ்வப்போது
வேடிக்கை பார்க்க அனுமதி
என் மகள் காலத்தில்
விரும்பிய இடத்தில்
கதவு வைக்க உரிமை.
ஆனாலும் எங்களிடம்
ஒருபோதும் இல்லை
கதவின் சாவி.



நன்றி : மனம் உதிரும் காலம் - கல்பனா ரத்தன் - கல்பதரு பதிப்பகம், 7 சேர்மன் சண்முகம் சாலை, சிவகாசி - 626 123 - தொலைபேசி : 9791065284 - பக்கங்கள் : 96 - விலை : ரூ.100

Comments