Skip to main content

துளி - 50 - எல்லோருக்கும் அன்புடன்..


அழகியசிங்கர்

Add caption





நான் அவசரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  இன்னும் மூன்று புத்தகங்களை.   கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.  ஆனால் இது குறித்து எழுதாமல் இருக்க முடியாது.  
இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் இந்தப் புத்தகத்தை சந்தியா பதிப்பகத்தின் உரிமையாளர் கொடுத்தார்.  அன்றிலிருந்து இதை எடுத்துப் படித்துக்கொண்டு வருகிறேன்.  நான் விட்டு விட்டுத்தான் படித்து வருகிறேன். முழுவதும் படிக்க வேண்டுமென்பதில்லை.  
பொதுவாகக் கடிதங்கள் என்றாலே அலட்சியப்படுத்துவார்கள்.  பெரும்பாலோர் கடிதங்களைச் சேகரித்து வைப்பது கிடையாது.  அலட்சியம் என்றால் அவ்வளவு அலட்சியம் செய்வார்கள்.  
வண்ணதாசன் கடிதங்கள் எல்லாம் சேகரித்து வைத்துள்ளார்கள்.  அதிலும் அவருடைய நண்பர்கள் எல்லாவற்றையும்.  முக்கியமான கடிதங்கள் ஒன்றிரண்டு போனாலும் கடிதங்களைச் சேகரித்து வைத்துள்ளார்கள். எனக்கு ஆச்சரியம் இந்தத் தொகுப்பு.
கடிதங்களாகவே 200 பக்கங்களுக்கு மேல்.  ஆச்சரியமாக இருக்கிறது.  நவீன விருட்சத்திற்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறார்.  தேடிப் பார்க்கவேண்டும்.  இப்படி விட்டுப்போன கடிதங்களும் இருக்கும். 
நானும் கடிதங்கள் மீது மையல் கொண்டிருக்கிறேன்.  கடிதம் புத்தகம் போட உள்ளேன்.  இதோ நான் எழுதிய கடிதங்கள் யாரிடமும் கிடைக்கப் போவதில்லை.  ஏனென்றால் யாரும் நண்பர்கள் எக் கடிதங்களைப் பத்திரப்படுத்தப் போவதில்லை.  அதனால் ஒன்று செய்தேன்.  கடிதங்களைப் பதிவு செய்து அனுப்புவேன்.  யாருக்கு அனுப்புகிறேன் என்று எனக்குத் தெரியும். இப்படியே 60 பக்கங்களுக்கு மேல் சேகரித்து வைத்திருக்கிறேன்.
வண்ணதாசனுக்கு நண்பர்கள் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.   ஒரு புதுமைப்பித்தனுக்கு குடும்பத்தார் சேகரித்து வைத்திருக்கிறாரகள்.   (இந்தப் புத்தகத்தைத்தான் தேடிக் கெண்டிருக்கிறேன்.)  ரசிகமணி கடிதங்களை மகஜன் அவர்கள் தொகுத்து வைத்து புத்தகமாக வைத்துள்ளார்கள்.  கடித இலக்கியம் என்ற பெயரில் சாகித்தியா அக்காதெமி ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளது.
ஏன் பிரமிளுக்குக் கூட இராஜமார்த்தாண்டன் தொகுத்துவைத்திருக்கிறார்.  கல்கிக்குக் கூட ஆனந்தி என்கிற அவர் பெண் சேகரித்து வைத்திருக்கிறார்.  
உவே சாமிநாதையர் அவர்களின் கடித் கருவூலம் என்ற தொகுதி 1 வாங்கினேன்.  (1877 - 1900) வரை அவருக்கு வந்த கடிதங்கள்தான்.  அவர் என்ன எழுதினார் என்பது தெரியவில்லை.  ஆ இரா வெங்கடாசலபதி தொகுத்துள்ளார்.  
அதேபோல் லட்டர்ஸ் என்ற புத்தகம்.  ரமண மகரிஷியைப் பற்றி புத்தகம்.  ஆசிரமத்தில் தங்கியிருந்த சூரி நாகம்மாள் தெலுங்கில் எழுதிய கடிதங்கள்.  அவர் சகோதரர் சாஸ்திரிக்கு எழுதியது.  ஆசிரமத்தைப் பற்றி.  
காப்காவிற்கு லட்டர்ஸ் டு த வெலிஸி என்ற கடிதங்கள் பிரபலமானவை.
நான் ஒவ்வொன்றிலும் ஒரு சாம்பிள் கடிதம் கொடுக்க விரும்புகிறேன்.

26.04.1985 ல் பிரமிள் இராஜமார்த்தாண்டனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அன்புள்ள ராஜமார்த்தாண்டன்,

இரண்டு கடிதங்கள் எழுதினேன். பதில் எழுதவும்.  சுவை இரண்டாவது இதழில் சி சு செ என்மேல் கை வைத்திருக்கிறார். 
அவருக்கு எனது கவிதைகள் குறித்து சாதாரண விபரங்கள் கூடப் புரியவில்லை. 
                                                                        - பிரமிள்ஜ் ஜீவராமுவ்



டி.கே.சிதம்பரநாத முதலியார்                                                            
   
                                                                                தென்காசி
                                                                                 27.04.1979

அருமைப் புதல்வி வேலம்மாளுக்கு,

இன்று காலையில் எழுதி அனுப்பிய கடிதம் கிடைத்திருக்கும். 

உலகம் மண்ணாய் மக்காய் இருக்கிறது.  பூகம்பம் சிலவேளை வந்து அதைக் கொஞ்சம் ஆட்டி விட்டுப் போகிறது.  ஆனாரல் மனப்பாலே குடித்துக்கொண்டிருக்கும் üüகல்வி கற்றவர்களைýý கொஞ்சம் ஆட்டிவிட்டால் நன்றாய் இருக்கும்.

                                                                                 டி கே சிதம்பரநாதன்
     

                                   கிழ்ப்பாக்கம்                                                                              18.05.1949
அநேக நமஸ்காரம்,

கலியாண வைபம் எல்லாம் கனவு மாதிரி தோன்றுகிறது. தாங்கள் ஊருக்குப் போனபிறகு வீடு வாகல் எல்லாம் வெறிக்சோடி இருக்கிறது.
                                                                               இங்ஙனம்
                                                                             ரா கிருஷ்ணமூர்த்தி 


அநேக ஆசிர்வாதம்,

நீ அனுப்பிய கார்டு வரப்பெற்று எல்லாந் தெரிந்துகொண்டேன். வடிவேலுக்குப் பணங்கொடுத்தாகி விட்டது.  வைத்தியர் தஞ்சாவூருக்குப் போயிருக்கிறார்.   மருந்து வர நான்கு தினம் செல்லும்.  சிதம்பரத்திற்குப் பத்துப்பாட்டு புத்தகம் அனுப்பிக் கடிதம் எழுதியிருக்கிறான்.
                                                                                வேங்கட சுப்பன்
                                                (உ வே சாமிநாதய்யரின் தந்தை எழுதிய கடிதம்)



அன்புமிக்க வல்லிக்கண்ணன்,                                                                      15,12.1990

வணக்கம்
தங்கள் 71ம் பிறந்த நாள் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிற  üமுகம்ý கிடைத்தது. உங்களை, உங்களின் ஒளிக்கீற்றை இப்படி எங்கேனும் எவரேனும் உணர்ந்து போற்றுகிறார்கள் என்பது மகிழ்வு தருவது மலைச் சுனை போலவும் வனச்சிற்றோடை போலவும் எங்கோ, யாருக்காகவோ என்ற நிச்சிந்தையில் அழுக்கற்றுக் காலம் கழிந்து விடுமாகில் எனக்கும் கூட அது உவப்பானது தான்.

                                                                                  கல்யாணி சி
                                                                                   தூத்துக்குடி
 
24.05.2018 (வியாழன்)

அன்புள்ள வண்ணதாசனுக்கு,

வணக்கம்.
தங்கள் கடிதம் கண்டேன். பதில் எழுத இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டேன்.  மன்னிக்கவும்.  என்னை சந்திரமௌலி என்று குறிப்பிடுவதை விட மௌலி என்று அழைப்பது இன்னும் பிடிக்கும். நான் நவீன விருட்சம் 105வது இதழை எல்லோருக்கும் அனுப்ப ஒரு பத்து நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டேன்.  அதுதான் தாமதம் உங்களுக்குப் பதில் எழுத.
                                                                                 அழகியசிங்கர்

 

Comments